கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு
கப சுர குடிநீர் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி மண்டலம்-28
ஆய்வாளர் நாகராஜன் உத்தரவின்படி ஆவடி மாநகராட்சி ஊழியர் ஜார்ஜ் மற்றும் சில மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் ஆவடி சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கியும் அவர்களது வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.